2026 மார்ச் 23, திங்கட்கிழமை

இளைஞரைக் காணவில்லை

R.Maheshwary   / 2022 ஒக்டோபர் 13 , பி.ப. 03:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

வட்டவளை- மவுண்ட்ஜின் தோட்டத்தைச் சேர்ந்த வடிவேல் திலீப்குமார் என்ற 26 வயது இளைஞர் கடந்த 8 நாட்களாக காணாமல் ​போயுள்ளார் என மிரிஹான மற்றும் வட்டவளை ஆகிய பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

நுகேகொடை- தெல்கந்த பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பணியாற்றி வந்த குறித்த இளைஞர், இந்த மாதம் 5ஆம் திகதி காலை 10 மணியளவில் வேலை செய்யுமிடத்திலிருந்து விடுமுறைப் பெற்றுக்கொண்டு வீட்டுக்குச் செல்வதாகத் தெரிவித்துள்ள நிலையில், இதுவரை வீட்டுக்கு வரவில்லை என்றும் அவரது கையடக்க தொலைபேசியும் இயங்கவில்லை என்றும்  அவரது வீட்டார் தெரிவித்துள்ளனர்.

எனவே, இவர் பற்றிய தகவல்கள் தெரிந்தால் 076-7636146 அல்லது 0779052121, 0775653714 என்ற இலக்கங்களுக்கு  தொடர்புகொள்ளுமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .