Editorial / 2020 மார்ச் 17 , பி.ப. 05:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்
பொதுத் தேர்தலில், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தாமரை மொட்டு சின்னத்தில் போட்டியிடவுள்ள இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், வேட்பு மனுவை (17), நுவரெலியா மாவட்டச் செயலகத்தில் தாக்கல் செய்தது.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானின் தலைமையில், இந்த வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இதன்போது இ.தொ.உறுப்பினர்கள் உட்பட சீ.பி.ரத்நாயக்கா, நிஹால் பியதிஸ்ஸ உள்ளிட்ட பலருடன் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தேசிய அமைப்பாளரும் சட்டத்தரணியுமான பெ.இராஜதுரை ஆகியோரும் கலந்துகொண்டனர்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நுவரெலியா மாவட்டத் தேர்தல் நடவடிக்கைகளின் தலைவராக ஆறுமுகன் தொண்டமான் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

42 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
2 hours ago