R.Maheshwary / 2022 ஒக்டோபர் 30 , மு.ப. 11:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஷேன் செனவிரத்ன
கல்முனை பிரதேசத்தில் இருந்து வருகைத் தந்த வேன், கட்டுகஸ்தோட்டை- மாத்தளை சந்தியில் செயலிழந்த போது, உதவி செய்ய வந்த நபர் ஒருவர், அந்த வாகனத்தைக் கடத்திச் சென்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது என கட்டுகஸ்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.
கல்முனை பிரதேசத்திலிருந்து வாடகைக்கு அமர்த்தி வரப்பட்ட குறித்த வேன், கட்டுகஸ்தோட்டை- மாத்தளை சந்தியை அண்மித்த போது வேனின் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது.
இதன்போது அருகிலிருந்த நபர் ஒருவர், குறித்த வேன் சாரதிக்கு உதவுவதற்காக வந்து, வேன் சாரதியுடன் நட்புடன் உறவாடியுள்ளார். பின்னர் வாகனத்தை தான் இயக்கித் தருவதாகத் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, சாரதி வேனிலிருந்து இறங்கியதையடுத்து சந்தேகநகபர் வேனை இயக்கி, மாத்தளை- தம்புளை வீதியில் வேனை ஓட்டிச் சென்றுள்ளதாகவும் சாரதி தெரிவித்துள்ளார்.
இதுவரை அந்த நபர் தொடர்பில் எவ்வித தகவல்களும் தெரியவரவில்லை என தெரிவித்துள்ள பொலிஸார், சந்தேகநபரையும் வேனையும் தேடி வருவதாகத் தெரிவித்துள்ளனர்.
4 hours ago
6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
8 hours ago