2026 ஜனவரி 20, செவ்வாய்க்கிழமை

எமது நாட்டு புத்திஜீவிகளை அவமதிக்கும் செயலாகும்

Ilango Bharathy   / 2021 ஒக்டோபர் 29 , மு.ப. 07:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

.எஸ்.கணேசன்

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட உரம் இலங்கை நிறுவனத்தால் நடத்தப்பட்ட
பரிசோதனையை ஏற்பதற்கு சீன நிறுவனம் மறுத்துள்ளது. இதனால் மூன்றாம் தரப்பை
நாடுவதற்கு தற்போது திட்டமிடப்பட்டுள்ளது.

இதனை அனுமதிக்க முடியாது. மூன்றாம் தரப்பை நாடுவது எமது நாட்டிலுள்ள புத்திஜீவிகளை, ஆய்வாளர்களை அவமதிக்கும் செயலாகவே
அமையும் என பாராளுமன்ற உறுப்பினர் வே. இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

இராதாகிருஷ்ணனின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து  பெறப்பட்ட கதிரைகள், நீர்
தாங்கிகள், கூடாரங்கள் என்பவற்றை, அக்கரப்பத்தனை ஹோல்புறுக் ஸ்ரீ கோவிலில் வைத்து பயனாளிகளுக்கு வழங்கிய நிகழ்விலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து தெரிவித்த அவர், குறிப்பாக சீனாவில் இருந்து சேதனப் பசளையை இறக்குமதி  எடுத்தது. அந்த சேதனப் பசளையில் தீங்கு விளைவிக்கக்கூடிய பக்ரீரியாக்கள் இருப்பதாக எமது நாட்டு ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டினர்.

ஆய்வுகள்மூலம் அதனை உறுதிப்படுத்தினர்.; எனவே, உரத்தட்டுப்பாட்டால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதால், உரத்தை வழங்குவதற்கு அரசாங்கம் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். முன்னேற்பாடுகள் எதுவும் இன்றி இரசாயன உரத்துக்கு திடீர் தடை விதிக்கப்பட்டதால் விவசாயிகள் இன்று பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X