2026 ஜனவரி 20, செவ்வாய்க்கிழமை

பெண்களே ரீல்ஸ் போடனுமா இனிமேல் கவனமாக இருங்கள்...

Janu   / 2026 ஜனவரி 20 , பி.ப. 12:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

சோஷியல் மீடியாவில் வைரலாக்கவும் ரீச் அதிகரிக்கவும், ஒரு நிரபராதி மனிதனின் மரியாதையும் வாழ்க்கையும் பலியாக்கப்பட்ட இந்த கொடூரத்திற்கு எதிராக, எடுத்துக்காட்டாகும் வகையிலான கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது.

கோழிக்கோடை சேர்ந்த தீபக் என்ற இளைஞரை, பொய்யான பாலியல் தொந்தரவு குற்றச்சாட்டை முன்வைத்து அவமதித்து, இறுதியில் தற்கொலைக்கு தள்ளிய சம்பவத்தில், சமூக செயற்பாட்டாளர் செபாஸ்டியன் வார்க்கியின் தலைமையில் வலுவான சட்ட நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.

இந்த கீழ்த்தரமான செயலில் பொறுப்புடைய ஷிம்ஜிதா முஸ்தஃபா என்ற பெண்ணுக்கு எதிராக, வழக்கறிஞர் ரினேஷ் மூலம், கோழிக்கோடு பொலிஸ்நிலையத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப் புகாரில், கேரளாவின் மனசாட்சி விரும்பும் பல முக்கிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்த வழக்குடன் தொடர்புடைய சேர்க்கக்கூடிய அனைத்து சட்டப் பிரிவுகளையும் உள்ளடக்கிய வலுவான புகார் தான் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பஸ்ஸில் நடந்த ஒரு சிறிய சம்பவத்தையோ அல்லது தவறான புரிதலையோ பெரிதுபடுத்தி, அதை மொபைல் கேமராவில் பதிவு செய்து, “பாலியல் தொந்தரவு” என்ற தலைப்பில் ஃபேஸ்புக்கில் பதிவிட்டதன் மூலம், தீபக் கடுமையான சைபர் தாக்குதலும் மன உளைச்சலும் எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்த கொடூரத்திற்கு எதிரான புகாரில், முக்கியமாக கோரப்படுவது, இந்திய நீதிச் சட்டம் (BNS), ஐடி சட்டம் ஆகியவற்றின் கீழ், தற்கொலைக்கு தூண்டுதல் (Abetment of Suicide) குற்றத்திற்காக, ஷிம்ஜிதாவுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை உறுதி செய்ய வேண்டும் என்பதாகும்.

 மேலும், ஒரே மகனை இழந்து, முதுமையில் ஆதரவற்ற நிலையில் இருக்கும் தீபக்கின் பெற்றோருக்கு, ஷிம்ஜிதாவிடமிருந்து ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வசூலித்து வழங்க வேண்டும் என்றும் புகாரில் கடுமையாக வலியுறுத்தப்பட்டுள்ளது.

2026 ஜனவரி 18 அன்று தாக்கல் செய்யப்பட்ட இந்த புகாரில், பொலிஸ் விசாரணையை தீவிரப்படுத்தவும், ஷிம்ஜிதாவை கைது செய்யவும் கோரப்பட்டுள்ளது.

ஒரு ஆணாக இருப்பதற்காக மட்டுமே அவர் சந்தித்த பழியும், சமூகத்தின் முன் ஏற்பட்ட அவமானமும் தான் தீபக்கை மரணத்திற்குத் தள்ளியது. பெண்கள் பாதுகாப்பு சட்டங்களை தவறாக பயன்படுத்தி, followers அதிகரிக்க யாரையும் எதையும் கூறலாம் என்ற சிலரின் எண்ணத்தை திருத்த, இந்த சட்டப் போராட்டம் அவசியமானதாக உள்ளது.

 தீபக்கின் குடும்பத்திற்கு நீதி கிடைக்கவும், இனி எந்த நிரபராதியும் இத்தகைய

சோஷியல் மீடியா விசாரணைகளில்” சிக்கி உயிரிழக்காதிருக்கவும், செபாஸ்டியன் வார்க்கியின் தலைமையில் இந்த போராட்டம் நடைபெறுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X