2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

ஓட்டோ குடைசாய்ந்ததில் மூவர் படுகாயம்

Kogilavani   / 2021 ஜனவரி 26 , பி.ப. 01:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்     

பொகவந்தலாவை பிரதான வீதி, டிக்கோயா கிளங்கன் பகுதியில், ஓட்டோ ஒன்று இன்று (26) அதிகாலை 50 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த மூவர் படுகாயமடைந்த நிலையில் கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஹட்டனிலிருந்து நோர்வூட் பகுதிக்குச் சென்ற ஓட்டோ ஒன்றே இவ்வாறு குடைசாய்ந்துள்ளது.

விபத்தில் ஓட்டோ சாரதியும் பயணிகள் இருவருமே படுகாயமடைந்துள்ளனர்.
விபத்து தொடர்பில், நோர்வூட் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X