2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

கத்திக்குத்தில் ஒருவர் பலி

Editorial   / 2020 மே 07 , பி.ப. 03:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சதீஸ்

பின்னவலை பொலிஸ்பிரிவுக்கட்பட்ட மரத்தென்ன, பம்புகொலை கீழ்ப்
பிரிவு தோட்டத்தில், கத்தி கூத்துக்கு இலக்கான குடும்பஸ்த்தர் ஒருவர்
பலியாகியுள்ளார் என, பின்னவலை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம், நேற்று இரவு (06) இரவு இடம்பெற்றுள்ளது.

அத்துடன், இந்தக் கத்திக்குத்தை மேற்கொண்ட நபரை, பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இந்தப் பகுதியிலுள்ள இருவர், கசிப்ப அருந்திவிட்டு, தோட்டப் பகுதியிலுள்ள வர்த்தக நிலையமொன்றுக்கு முன்னால், வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டதாகவும் இது பின்னர் மோதலாக மாறிய பின்னரே, ஒருவர் மற்றயைவரை கத்தியால் குத்தியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கத்திக்குத்துக்கு இலக்கான நபர், மரத்தென்ன வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படும் வழியிலேயே உயிரிழந்துவிட்டார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .