R.Maheshwary / 2022 ஜனவரி 05 , மு.ப. 09:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்
கந்தப்பளை-கோனப்பிட்டிய வீதியுடனான போக்குவரத்து இன்று (05) காலை முதல் முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது.
கோனப்பிட்டிய- கல்கந்தை எனும் இடத்தில் இன்று அதிகாலை 1.30 மணியளவில் இடம்பெற்ற மண்சரிவு காரணமாக, இந்த வீதியுடனான போக்குவரத்து தடைசெய்யப்பட்டுள்ளது.
, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்று,வீதியில் சரிந்துள்ள மண் மற்றும் கற்களை அகற்ற நடவடிக்கை எடுக்க தயாராகி வருவதாக இராகலை மற்றும் மந்தாரநுவர பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .