2025 மே 19, திங்கட்கிழமை

கர்ப்பிணி உள்ளிட்ட நால்வர் குளவிக்கொட்டுக்கு இலக்காகினர்

R.Maheshwary   / 2022 ஓகஸ்ட் 23 , பி.ப. 02:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஸ

தேயிலைப் பறித்துக்கொண்டிருந்த பெண்கள் நால்வர் குளவிக்கொட்டுக்கு இலக்காகி, பொகவந்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று (23) பகல்  இச்சம்பவம் இடம்பெற்றதுடன், இதில் கர்ப்பிணி ஒருவரும் உள்ளடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொகவந்தலாவை – பிரிட்வெல்  தோட்டத்தைச் சேர்ந்த 4 பெண்களே இவ்வாறு குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

இதேவேளை குறித்த கர்ப்பிணியை அதிகமான குளவிகள் கொட்டியுள்ளதால் அவர் பொகவந்தலாவை வைத்தியசாலையிலிருந்து டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார் என வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்துள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X