Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2017 ஏப்ரல் 10 , மு.ப. 06:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பூவரசன்
பதுளை, நமுனுகுல மாதுளாவத்த தோட்டத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த வெளிக்கள உத்தியோகஸ்தரான செல்லையா சந்திரசேகரன் (வயது 55) என்பவர், கற்பாறையிலிருந்து தவறி விழுந்து, நேற்றுக் காலை உயிரிழந்துள்ளதாக, பசறை பொலிஸார் தெரிவித்தனர்.
மேற்படித் தோட்டத்தில் சிலர் அனுமதியின்றி தேயிலை பறித்துக்கொண்டிருப்பதை அறிந்து, அவர்களை பிடிபதற்காகச் சென்றபோதே, இவர் கற்பாறையிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக, ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இவரது சடலம், பிரேத பரிசோதனைக்காக பசறை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில், பசறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago