2025 நவம்பர் 17, திங்கட்கிழமை

காலிமுகத்திடல் கடலில் மூழ்கி இளைஞன் பலி

Editorial   / 2025 நவம்பர் 17 , மு.ப. 09:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

கோட்டை காவல் பிரிவின் காலி முகத்திடல் பகுதியில் 6.11.2025 அன்று மாலை, நீச்சலடிக்கச் சென்ற இரண்டு பேர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. காவல்துறையினர் கடற்படையினருக்கு தகவல் அளித்தனர். நீரில் மூழ்கிய இருவரையும் மீட்டு கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஒருவர் உயிரிழந்தார். இறந்தவர் 19 வயதுடைய அக்கரபத்தனை பகுதியைச் சேர்ந்தவர். சடலம் கொழும்பு தேசிய மருத்துவமனையின் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், கோட்டை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X