2025 மே 13, செவ்வாய்க்கிழமை

கால்நடை வளர்ப்பு குறைவு

Janu   / 2023 ஜூன் 20 , மு.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ். கே. குமார்

சகல வளங்களும் கொண்ட மலையகத்தில் எதிர்வரும் காலங்களில் பசு மாடுகள் வளர்ப்பை ஊக்கப்படுத்தி, பால் உற்பத்தியை அபிவிருத்தி செய்ய அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நுவரெலியா தொகுதி அமைப்பாளரும் நுவரெலியா மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தமிழ் பிரதிநிதிக் குழு தலைவருமான கலாநிதி சதானந்தன் திருமுருகன் அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

அக்கோரிக்கையில் திருமுருகன் மேலும் குறிப்பிடுகையில்,நுவரெலியா மாவட்டத்தில் கடந்த 15 வருடங்களுக்கு மேலானகாலப் பகுதியில் கால்நடை வளர்ப்பு படிப்படியாக அறுகி வந்துள்ள நிலையில் கால் நடை வளர்ப்பாளர்களின் எண்ணிக்கை வீதமும்  90 வீதம் குறைந்துள்ளது.

நுவரெலியா மாவட்டத்தில் கால்நடை வளர்ப்புக்கான புற்தரைகள்,புற்கள்,மற்றும் காலநிலை வளங்களும் காணப்படும் நிலையில் கடந்த  15 வருடங்களுக்கு முன்பு காணப்பட்ட கால் நடை வளர்ப்பு தற்போது நூற்றுக்கு 90% வீதமாக வீழ்ச்சி கண்டுள்ளதாக கால்நடை வளர்ப்பாளர்கள் தெரிவிக்கிறனர்.

தற்போது நிலவும் பால்மா தட்டுப்பாடுகளுக்கு இதுவும் ஒரு காரணம் மற்றும் கால்நடைகளுக்கான வைத்திய வசதிகள் பெற்றுக்கொள்வதில் சிரமம், நல்ல இன கரவை பசுகள் பெற்றுக்கொள்ள முடிய வில்லை. இது  தொடர்பில் அரசாங்கமும்  எந்தவித புதிய வேலைத்திட்டங் களையும் முன்னெடுப்பதற்கு முயற்சி எடுப்பதிலை. கடந்த 20 வருடங்களுக்கு முன் அரசாங்க பாற்பண்ணைகளிலிருந்தும் நியுஸ்லாந்து மற்றும் அவுஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளிலிருந்தும் நல்ல இன கரவை பசுமாடுகள் இறக்குமதி  செய்து கடன் அடிப்படையில் உற்பத்தியாளர்களுக்கு வழங்கினார்கள்.ஆனால் அந்த வேலைத்திட்டத்தை தற்பொழுது செயல்படுத்துவதில்லை.

கடந்த 2001ஆம் ஆண்டுக்கு முன்னரான காலப்பகுதியில் கிராமிய அபிவிருத்தி மற்றும் கால்நடை அபிவிருத்தி அமைச்சு ஒன்றுக்கு நுவரெலியா மாவட்ட கெபினட் அமைச்சராக அமரர் சௌமிய மூர்த்தி தொண்டமான் நியமனம் பெற்றிருந்தார்..அவர் அமைச்சு பதவி வகித்த காலத்தில் மத்திய மாகாணத்தில் மாத்தளை ,கண்டி,மற்றும் நுவரெலியா மாவட்டத்தில் கால்நடை அபிவிருத்தி,பால் உற்பத்தி,மற்றும் பால்மா உற்பத்தி,பாலுணவு உற்பத்தி என அபிவிருத்தி கண்டிருந்தது.

பெருந்தோட்டப்பகுதிகளிலும் தொழிலாளர் குடும்பங்கள் தமது தோட்ட தொழிலுக்கு அப்பால் கால் நடைகள் வளர்பில் அதிகளவாக ஈடுப்பட்டு பால் உற்பத்தியிலும், மாட்டு சாண உரங்களை விற்பணை செய்வதிலும் பெரிதும் இலாபங்களை கண்டு நாள் மற்றும் மாத வருமானங்களில் முற்னேற்றம் கண்டிருந்தனர். அமரர் சௌமிய மூர்த்தி தொண்டமான் காலத்தின் பின் அமரர் ஆறுமுகம் தொண்டமான் குறித்த கால்நடை துறை அமைச்சினை தன்வசம் வைத்திருந்த காலப்பகுதியிலும் கால்நடை அபிவிருத்தி கண்டிருந்தது.இவரின் காலத்தில் வெளிநாடுகளில் இருந்து நல்ல இன கரவை பசு மாடுகளை இறக்குமதி செய்து கால்நடை வளர்ப்பாளர்களுக்கு வழங்கியிருந்தார்.

அதன் பின் கடன் அடிப்படையிலும் மிருக வைத்தியசாலைகள் ஊடாக கால்நடைகள் வழங்கப்பட்டது,பால்பண்ணைகளும் விருத்திக்கப்பட்டது,தொழில்வாய்புகளும் பெருகியது,பாலுணவு விற்பணை நிலையங்கள், பால் சேகரிப்பு நிலையங்கள் உருவாக்கப்பட்டன,பொது பட்டிகள் தோட்டப்பகுதிகள் மற்றும் கிராமப் பகுதிகளிலும் அமைக்கப்பட்டு கால்நடை வளர்ப்பு ஊக்கப்படுத்தப்பட்டது.

அதன் பின் ஆட்சிக்கு வந்த அரசாங்கத்தில் கால்நடை அபிவிருத்தி அமைச்சு கைமாறி சென்றதன் பின் மலையகத்திற்கான கால்நடை அபிவிருத்திற்கு உதவிகள் கிடைக்காத நிலையில் அதன் அபிவிருத்தி படிப்படியாக அறிதாகி இன்று பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் மாகாண சபைகளில் விவசாயத்துறை,கால்நடை அபிவித்தி துறை அமைச்சு ஊடாக மத்திய மாகாணத்தில் தோட்ட மற்றும் கிராமப்புற பகுதிகளில் கால்நடை அபிவிருத்திகளை ஊக்குவிக்க நடவடிக்கைகள் மற்றும் உதவிகள் வழங்கப்பட்டிருந்தது.

இப்போது மாகாண சபைகள் கலைக்கப்பட்டுள்ள நிலையில் மாகாண கால்நடை அபிவிருத்தி அமைச்சு ஊடாக கிடைக்க கூடிய உதவிகளிலும் தொய்யல் ஏற்பட்டுள்ளதுடன் உதவிகளும் சரியாக கால்நடை வளர்ப்பாளர்களுக்கு கிடைப்பதில்லை.மறுபுறத்தில் கால்நடைகளுக்கான உணவு வகைகளின் விலையேற்றம்,மாடுகள் இறக்குமதியில் பாதகம்,மிருக வைத்தியசாலைகளில் காணப்படும் குறைப்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் காரணமாக பசு மாடுகள் வளர்ப்பாளர்களின் ஆர்வம் குன்றி இன்று நூற்றுக்கு 90% பாதிக்கப்பட்டுள்ளது.

ஏதோ விரல்விட்டு எண்ணக்கூடிய அளவினரே கால்நடை வளர்ப்பில் ஆர்வம் கொண்டுள்ளனர்.இந்த நிலையில் இன்று நாட்டில் பால்மா தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.ஆனால் அரசாங்கம் கால்நடை உற்பத்தியை விருத்திப்போம்,பால் உற்பத்தியை அபிவிருத்தி செய்வோம் என்று சொல்கிறார்களே தவிர கால்நடை வளப்பாளர்களை ஊக்கப்படுத்த எத்தகைய நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை.

அத்துடன் அரசாங்க மிருக வைத்தியசாலைகளில் மருந்துகள்,வைத்திய ஊழியர்கள், உத்தியோகஸ்தர்கள்,வெளிக்கள சேவையாளர்கள் என பல தட்டுப்பாடுகள் நிலவுகிறது. தோட்டப் பகுதிகளில் புற்கள் வளர்க்க தரிசுநிலங்கள் வழங்குவதில்லை பட்டிகள் அமைக்க இடங்களும் வழங்குவதில்லை இவ்வாறாக ஏகப்பட்ட சிக்களுக்கு முகம் கொடுக்க நேரிட்டுள்ளதால் மாடு வளர்ப்பு மற்றும் பால் உற்பத்தி பெரும் பாதிப்பை கொண்டுள்ளது.

மேலும் தற்சமயம் ஒரிரு பசு மாடுகளை வளர்க்கும் நபர்கள்கூட தங்களது பசு மாடுகளை செனை படுத்தவும் பசு மாடுகளுக்கு நோய் ஏற்பட்டால் குணப்படுத்த தனியார் வைத்தியர்களுக்கு 5000/=ரூபாய் தொடக்கம் 7000/=ரூபாய் வரை வழங்கும் நிலையுள்ளது.

எனவே சகல வளங்களும் கொண்ட மலையகத்தில் எதிர்வரும் காலங்களில் பசு மாடுகள் வளர்ப்பை ஊக்கப்படுத்தி, பால் உற்பத்தியை அபிவிருத்தி செய்ய அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். என திருமுருகன்  கால்நடை வளர்ப்பாளர்கள் சார்பாக அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X