Janu / 2025 ஜூன் 24 , மு.ப. 11:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
கினிகத்ஹேன-நோட்டன்பிரிட்ஜ் வீதி செவ்வாய்க்கிழமை (24) முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக நோர்வுட் வீதி மேம்பாட்டு அலுவலக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
களனி நதியில் நீர் பாயும் லோனாக் அட்லிஸ் பகுதியில் உள்ள கால்வாயின் குறுக்கே கட்டப்பட்ட வீதி, மூழ்கும் அபாயத்தில் இருந்ததால், கடந்த 14 ஆம் திகதி முதல் வீதி தற்காலிகமாக மூடப்பட்டு, அந்த இடத்தில் ஒரு பேல் பாலம் (இரும்பு பாலம்) அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நோர்வுட் வீதி மேம்பாட்டு அலுவலகத்தால் செவ்வாய்க்கிழமை (24) முதல் வீதியை வாகனப் போக்குவரத்திற்கு மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பாலத்தை நிர்மாணிக்க நெடுஞ்சாலைகள் அமைச்சகம் நிதி ஒதுக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ரஞ்சித் ராஜபக்ஷ

15 minute ago
28 minute ago
39 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
28 minute ago
39 minute ago
2 hours ago