2026 மே 11, திங்கட்கிழமை

குடும்பத்துடன் இணைந்து மகனை கொன்ற தந்தை

Janu   / 2026 மே 11 , பி.ப. 03:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டி, கிவுல்லிந்த பகுதியில் 23 வயதுடைய இளைஞர் ஒருவர் கோடரியால் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவத்தில் 23 வயதுடைய ஹென்னன்கெதர சுசந்த பண்டார என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞனின் தாய் ஏற்கனவே உயிரிழந்துள்ள நிலையில், அவரது தந்தை இரண்டாவது திருமணம் செய்துள்ளார். இந்நிலையில், தந்தையும் அவரது இரண்டாவது மனைவியின் மகன், மகள் மற்றும் மருமகன் ஆகியோரும் இணைந்து இந்த கொலையை செய்துள்ளமை ​பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

சந்தேக நபர்கள் தமது வீட்டிற்கு முன்னால் சிறிய உணவகம் ஒன்றையும் நடத்தி வந்துள்ளனர். தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட கோடரி, அருகில் உள்ள நீரோடை ஒன்றில் வீசப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ள நிலையில், அதனைத் தேடும் பணிகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கண்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .