2026 மே 09, சனிக்கிழமை

dd

குப்பைகள் குவிக்கப்பட்டுள்ளமையால் மக்கள் அவதி

உமாமகேஸ்வரி   / 2019 செப்டெம்பர் 19 , மு.ப. 09:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரத்தினபுரி, வறக்காதொட்டை வீதியில் குப்பைகள் நிறைந்து காணப்படுவதாக, பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இப்பகுதியில், மூன்று மதங்களைச் ​சேர்ந்த வணக்கஸ்தலங்கள் இருப்பதாகவும் பாடசாலைகள் காணப்படுவதாகவும் எனினும் இவ்வீதியில் குப்பைகள் நிறைந்து காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது தொடர் மழை பெய்து வருகின்றமையால், துர்நாற்றம் வீசுவதாகவும் டெங்கு நுளம்பு பரவும் அபாயம் ஏற்படுமோ என்று மக்கள் அஞ்சுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எனவே, இந்த வீதியை சுத்தப்படுத்தித் தருமாறு, மக்கள் உரிய அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .