2026 மே 09, சனிக்கிழமை

dd

குளவி கூட்டுக்கு வைத்த தீயால் பற்றியெரிந்த விடுதி

Editorial   / 2019 ஓகஸ்ட் 09 , மு.ப. 11:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கணேசன்  

நோர்வூட் கிளங்கன் பகுதியில் அமைந்துள்ள 100 வருடம் பழமை வாய்ந்த சுற்றுலா விடுதி, திடீர் தீ விபத்தில் எரிந்து நாசமாகியுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.

ஹட்டன் – பொகவந்தலாவை பிரதான வீதியில், டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலைக்கு முன்னால் அமைந்துள்ள குறித்த விடுதியே நேற்று  மாலை 6.30 மணியளவில் தீப்பற்றி எரிந்துள்ளது.

கிளங்கன் தேயிலை தோட்டத்தின் தோட்ட முகாமையாளரின் உத்தியோகபூர்வ இல்லாமாக ஆங்கிலேயர் ஆட்சியில் பயன்படுத்தப்பட்ட இந்த கட்டடம் பின்னர் இது விடுதியாக மாற்றப்பட்டது.

குறித்த கட்டடத்தின் கூரை பகுதியில் கட்டப்பட்டிருந்த குளவி கூட்டை ஊழியர்கள் தீயிட்டு எரிக்க முயற்சித்த நிலையில், கட்டடத்தின் மீது தீ பரவியுள்ளது.

ஹட்டன் - டிக்கோயா நகர சபையின் தீயணைப்பு பிரிவினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததுடன், நோர்வூட் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .