R.Maheshwary / 2021 டிசெம்பர் 15 , மு.ப. 09:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ். சதீஸ்
பொகவந்தலாவ- எல்பட தமிழ் வித்தியாலயத்தில் கல்வி கற்கும் 17 மாணவர்கள் குளவிக் கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் இன்று (15) காலை இடம்பெற்றுள்ளது.
பாடசாலைக்கு அருகிலுள்ள மரத்திலிருந்த குளவி கூட்டின் மீது, கழுகு மோதியதால் குளவிகள் கலைந்து மாணவர்களை தாக்கியுள்ளன.
இதனையடுத்து, மாணவர்கள் அனைவரும் வீட்டுக்கு திருப்பி அனுப்பட்டதோடு, ஹட்டன் வலையகல்வி பணிப்பாளர் ஏ.சத்தியேந்திராவின் பணிப்புரைக்கு அமைய, இன்றைய தினம் பாடசாலை மூடப்பட்டுள்ளதாக வித்தியாலயத்தின் அதிபர் என்.தியாகராஜன் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .