Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Editorial / 2019 மார்ச் 18 , பி.ப. 01:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.தி.பெருமாள்
மஸ்கெலியா நகருக்கு நீரை வழங்கும் நீர்த்தாங்கிக்கு அருகிலுள்ள 100 கிலோகிராம் எடை கொண்ட குளோரின் சிலிண்டரில், இன்று (18) காலை ஏற்பட்ட வாயு கசிவு காரணமாக, மூவர் பாதிக்கப்பட்ட நிலையில் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் மஸ்கெலியா கிளையிலுள்ள குளோரின் சிலிண்டரிலேயே, வாயு கசிவு ஏற்பட்டுள்ளது.
இதனால், அந்தக் கிளையில் பணியாற்றிவந்த அதிகாரி, முகாமையாளர் நிரோன் பண்டார, ஆய்வு கூட உத்தியோகத்தர் ஆகியோர் பாதிப்படைந்துள்ளனர்.
மேலும் வாயு கசிவின் பாதிப்பைக் கருத்திற்கொண்டு, அப்பகுதியிலுள்ள மக்களை பாதுகாப்பாக இருக்குமாறு, மஸ்கெலியா பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
இதேவேளை மேற்படி கிளைக்கு அருகிலிருந்த, செடிகள் அனைத்தும் கருகிவிட்டன என்றும் தெரிவிக்கப்படுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
9 minute ago
22 minute ago
28 minute ago