2025 ஜூன் 25, புதன்கிழமை

குளவிக் கொட்டுக்கு இலக்காகி 8 பேர் பாதிப்பு

Sudharshini   / 2015 செப்டெம்பர் 12 , மு.ப. 10:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஷ

நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிலிங்போனி தோட்டத்தில், குளவிக் கொட்டுக்கு இலக்கான 08 தொழிலாளர்கள், டிக்கோயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொழுந்து பறித்துக்கொண்டிருக்கும் போது, மரமொன்றில் இருந்து கலைந்து வந்த குளவிகள், தங்களை தாக்கியதாக பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

குளவிக்கொட்டுக்கு இலக்கான  8 பேரும் தொடர்ந்தும் டிக்கோயா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதில் 2 ஆண்களும் 6 பெண்களும் அடங்குகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .