Ilango Bharathy / 2021 ஒக்டோபர் 06 , மு.ப. 08:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம். செல்வராஜா
சட்டவிரோதமாக கால்நடைகளை ஏற்றிச் சென்ற லொறியொன்று விபத்துக்குள்ளாகியதில்,
லொறியின் சாரதியும் உதவியாளரும் காயமடைந்து, தியத்தலாவை வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஹப்புத்தளை- வல்கவெல பகுதியிலேயே நேற்று (5) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்துக்குள்ளான லொறியிலிருந்து 16 கால்நடைகளும் வெள்ளவாயவிலிருந்து
நுவரெலியாவுக்கு கொண்டு செல்லப்பட்ட போதே, விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதனையடுத்து லொறியிருந்த 9 பசுக்களும் 7 எருமை மாடுகளும் ஹப்புத்தளை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான விசாரணையை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .