2026 மே 09, சனிக்கிழமை

dd

சப்ரகமுவ மாகாண அரச சேவைக்கு புதிதாக 27 பேர் நியமனம்

சிவாணி ஸ்ரீ   / 2020 பெப்ரவரி 13 , பி.ப. 12:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

சப்ரகமுவ மாகாண அரச சேவைக்காக, புதிதாக 27 பேர் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். இவர்களுக்கான நியமனக் கடிதங்கள், சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவவால், வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் மூலம் நடத்தப்பட்ட பரீட்சைகளில், அதிகளவு புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்தவர்களைத் தெரிவு செய்து, சப்ரகமுவ மாகாண அரச ஆணைக்குழுவின் பரிசீலனைக்கமையவே இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

கால்நடை அபிவிருத்தி ஆலோசகர்கள் 13 பேரும் விவசாயத்துறை ஆலோசகர்கள் 10 பேரும், தொழில்நுட்ப அதிகாரி 4 பேரும் உள்ளடங்குகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .