Editorial / 2025 ஒக்டோபர் 05 , பி.ப. 04:47 - 0 - {{hitsCtrl.values.hits}}

மடுல்சீமையில் சின்ன உலக முடிவை பார்க்க, மல்வானை பகுதியிலிருந்து வந்த சுற்றுலாப் பயணிகள் குழு மீது குளவி கொட்டியதில் ஒன்பது பேர் காயமடைந்து லுணுகலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக மடுல்சீமை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மல்வானை பகுதியைச் சேர்ந்த பத்து இளைஞர்கள் குழு, சின்ன உலக முடிவை பார்க்க வந்து அங்கு கூடாரம் அமைத்து சனிக்கிழமை (04) இரவைக் கழித்திருந்தனர். அவர்கள் உலகின் சின்ன உலக முடிவை, ஞாயிற்றுக்கிழமை (05) பார்க்கச் சென்றபோது, அங்கிருந்த குளவிக்கூடு திடீரென களைந்து அவர்களை கொட்டத் தொடங்கியது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். .
பின்னர், குளவி தாக்குதலுக்கு ஆளானவர்கள் ஓடிவிட்டனர், குளவிகள் அவர்களை விரட்டிச் சென்று தாக்கியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மடுல்சீமை பொலிஸார் அதிகாரிகளுடன் சேர்ந்து, அப்பகுதி மக்கள் பின்னர் குளவிகளை விரட்ட புகையை போட்டுள்ளனர். குளவிகளை அவ்விடத்தில் இருந்து பறந்து சென்றதன் பின்னர் காயமடைந்தவர்களை லுணுகலை மருத்துவமனையில் அனுமதித்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
37 minute ago
41 minute ago
45 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
41 minute ago
45 minute ago