2026 மே 09, சனிக்கிழமை

dd

சிறுத்தைத் தாக்கியதால் மாணவனுக்குக் காயம்

Editorial   / 2019 செப்டெம்பர் 15 , பி.ப. 05:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

எஸ். சுஜிதா, கௌசல்யா

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எல்ஜின் தோட்டத்தில், நேற்று (14) இரவு, 9 மணியளவில், 18 வயது பாடசாலை மாணவன் ஒருவன், சிறுத்தையின் தாக்குதலுக்கு உள்ளான நிலையில், நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிறுத்தைத் தாக்குதலுக்கு உள்ளான சிறுவனுக்கு, பிரதேச மக்கள் முதலுதவி வழங்கிய பின்னர், அவர் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைகளுக்காக, நுவரெலியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

ஹட்டனில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பின்னர், ஊவாக்கலை, எல்ஜினிலுள்ள தனது வீட்டுக்கு வந்துகொண்டிருந்தபோதே, இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .