Freelancer / 2023 பெப்ரவரி 13 , பி.ப. 10:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுமணசிறி குணதிலக்க
பிபில பொலிஸ் பிரிவில் தியகோபல கரகஹவெவை வசிப்பிடமாகக் கொண்ட 15 வயதான பாடசாலை மாணவியை, பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் கீழ், 17 வயதான சிறுவன் நேற்று (13) கைது செய்யப்பட்டுள்ளார்.
பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளான மாணவி, இன்றைக்கு ஒரு மாதத்துக்கு முன்னர், தனியார் வகுப்புக்குச் சென்று வீடு திரும்பிக்கொண்டிருந்த போது, இடையில் வழிமறித்த சிறுவன் , பற்றைக்காட்டுக்குள் இழுத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கியுள்ளார் என செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
வைத்திய பரிசோதனைக்காக மாணவி, பிபில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவித்த பொலிஸார், சிறுவனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும்
தெரிவித்தனர். R
1 hours ago
1 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
3 hours ago
3 hours ago