R.Tharaniya / 2025 நவம்பர் 02 , பி.ப. 04:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
நுவரெலியா, ஹக்கலவில் உள்ள சீதை அம்மன் ஆலயத்தில் சனிக்கிழமை (01) அன்று இரவு ஒரு திருட்டு சம்பவம் நடந்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. கோயில் உள்ள ஆறு உண்டியல்கள் உடைக்கப்பட்டுள்ளன.
சிறப்பாக தயாரிக்கப்பட்ட மூன்று பணப் பெட்டிகள் பின்னர் அருகிலுள்ள கால்வாயில் அப்புறப்படுத்தப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக கோயில் நிர்வாகக் குழு நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.
கோயிலின் பாதுகாப்பு கேமரா அமைப்பின் தரவு சேமிப்பு சாதனம் அகற்றப்பட்டதாகவும் விசாரணை முலம் தெரியவந்தது.
இரவு காவலர் தூங்கிக் கொண்டிருந்தபோது சந்தேக நபர்கள் கோயிலுக்குள் நுழைந்து உண்டியலை உடைத்து பணத்தை எடுத்துச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர். குற்றவாளிகளை அடையாளம் கண்டு கைது செய்ய விசாரணைகள் மேச்கொண்டு வருகின்றனர்.
41 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
1 hours ago