2025 ஓகஸ்ட் 07, வியாழக்கிழமை

சீதை அம்மன் ஆலய மண்டப திறப்பு விழா

R.Tharaniya   / 2025 ஓகஸ்ட் 04 , மு.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

நுவரெலியாவில் உள்ள சீதை அம்மன் ஆலயத்தில் புதிதாக கட்டப்பட்ட அன்னதான மண்டபம் ஞாயிற்றுக்கிழமை (03) அன்று திறந்து வைக்கப்பட்டது.

இந்திய அரசின் நிதி உதவியுடன் கட்டப்பட்ட சீதை அம்மன் ஆலயத்தில் அன்னதான மண்டபத்தை வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஆகியோர் திறந்து வைத்தனர்.

சீதை அம்மன் ஆலயத்தின் அறங்காவலர் குழுவின் தலைவர் வி. ராதா கிருஷ்ணன், திறப்பு விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் இந்திய உயர் ஸ்தானிகர் ஆகியோரை வரவேற்றார்.

சீதை அம்மன் கோவிலில் புதிதாக கட்டப்பட்ட அன்னதான மண்டபத்தின் திறப்பு விழாவில் பல உள்ளூர் மற்றும் வெளிநாட்டு விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.

ரஞ்சித் ராஜபக்ஷ


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .