2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

சென்கிளயர் தோட்ட தேயிலை தொழிற்சாலையை திறக்க நடவடிக்கை

Sudharshini   / 2015 செப்டெம்பர் 23 , பி.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஷ்

தலவாக்கலை, சென்கிளயர் தோட்டத்தில் மூடப்பட்டிருக்கும்  தேயிலை தொழிற்சாலையை அடுத்த மாத இறுதிக்குள் திறப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக தோட்ட நிர்வாகத்தின் உயரதிகாரி  ஆர்.மாஹாதென்ன தெரிவித்துள்ளார். எனினும், குறிப்பிட்டவாறு தொழிற்சாலையை திறக்காவிடின்; தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக  இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலவாக்கலை பிராந்திய இயக்குநர் ஆர்.லோகதாஸ் தெரிவித்தார்.

நீண்ட காலம் திறக்கப்படாதிருந்த சென்கிளயர் தொழிற்சாலையை திறக்கும்படி, தொழிலாளர்கள், இ.தொ.கா விடம் கோரியிருந்தனர். இது தொடர்பிலான பேச்சுவார்த்தை செவ்வாய்க்கிழமை (22) மாலை தோட்ட காரியாலயத்தில் நடைபெற்றது.

இப்பேச்சுவார்த்தையில் தோட்ட நிர்வாக அதிகாரிகள், தொழிற்சங்க பிரதிநிதிகள் தோட்டத் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

இத்தொழிற்சாலைக்கு வந்து சேரும் தேயிலை கொழுந்தின் அளவு குறைவடைந்துள்ளமையால் தொழிற்சாலைக்கு நட்டம் ஏற்பட்டுள்ளது. இதனால், தேயிலை கொழுந்துகளை மஸ்கெலியா மற்றும் தலவாக்கலை தோட்ட தொழிற்சாலைகளுக்கு வழங்கி நட்டத்தை ஈடுசெய்து வருவதானால் தொழிற்சாலையை மூடியதாக தோட்ட அதிகாரி கூறினார்.

அதேவேளை, எதிர்வரும் மாதத்தில் கூடுதலான தேயிலைக் கொழுந்தை சென்கிளயர் தோட்டத்திலிருந்த எதிர்பார்ப்பதால் தொழிற்சாலையை திறப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக அவர் கூறினார்.

தோட்ட நிர்வாகம் கூறியது போல், அடுத்த மாத இறுதிக்குள் தொழிற்;சாலையை திறக்காவிட்டால் இ.தொ.கா.வின் பொதுச் செயலாளர் ஆறுமுகன் தொண்டமானுடன் பேச்சுவார்த்தை நடத்தி தொழிற்சங்க நடவடிக்கை மேற்கோள்ளப்படுமென நிர்வாக அதிகாரிக்கு கோரிக்கை விடுத்துள்ளதாக ஆர்.லோகதாஸ் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .