2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

சிற்றுண்டிச்சாலையிலிருந்து கர்ப்பிணியின் சடலம் மீட்பு

Sudharshini   / 2015 ஓகஸ்ட் 25 , பி.ப. 01:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

அலவத்துகொடை நகரிலுள்ள சிற்றுண்டிச்சாலையிலிருந்து கர்ப்பிணி ஒருவரின் சடலத்தை திங்கட்கிழமை மாலை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நாவலப்பிட்டியைச சேர்ந்த, ஒரு வயது குழந்தையின்  தாயான,  சிக்கன் லெட்சுமி என்ற (31 வயது), கர்ப்பிணியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.  

இவரது கணவன் அலவத்துகொடை நகரிலுள்ள  சிற்றுண்டிச்சாலையை வாடகைக்கு எடுத்து நடத்தி வந்ததாக தெரியவருகிறது.  

சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பில் அலவத்துகொடை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .