Editorial / 2022 ஜூலை 15 , பி.ப. 01:41 - 0 - {{hitsCtrl.values.hits}}


நோர்வூட் பிரதேச சபையின் இ.தொ.கா உறுப்பினர் சூசை அலக்ஸாண்டர் எரிவாயு சிலிண்டர்கள் வரிசையாக வைக்கப்பட்டிருந்த வரிசையில் நிற்கும் பொது மகன் ஒருவரை அச்சுறுத்தி, தாக்க செல்லும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் நிலையில், அவர் மீது விசாரணை நடைப்பெறும் எனவும், அதுவரை கட்சியில் இருந்து இடைநிறுத்துவதாகவும் இ.தொ.காவின் பொதுசெயலாளர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
நோர்வூட் பிரதேச சபையின் உறுப்பினர் சூசை அலக்ஸாண்டர் மீது எழுந்துள்ள சர்ச்சைகள் மற்றும் குற்றச்சாட்டுகள் தொடர்பில்,இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உயர்மட்ட ஒழுக்காற்று குழு, வெகுவிரைவில் உரிய விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளது என்று காங்கிரஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
இதுபோன்ற செயல்களுக்கு இ.தொ.கா ஒருபொழுதும் அனுமதியளிக்காது என்பதோடு குறித்த பிரதேச சபை உறுப்பினரின் சகல கட்சி உறுப்புரிமைகளும் உடன் அமுலுக்கு வரும் வகையில் தற்காலிகமாக நீக்கியதாக இ.தொ.காவின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
4 minute ago
5 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
5 hours ago
7 hours ago
8 hours ago