Freelancer / 2022 பெப்ரவரி 17 , மு.ப. 10:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
என்.ஆராச்சி
களனி ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கடந்த ஜனவரி மாதம் 31ஆம் திகதி கண்டெடுக்கப்பட்டது.
எனினும், குறித்த சடலத்தை இதுவரை அடையாளம் காணமுடியவில்லை என தெரிவித்த பொலிஸார், பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
உயிரிழந்தவர் 5 அடி 5 அங்குல உயரம் மற்றும் கறுப்பு காற்சட்டை மற்றும் டி-சேர்ட் அணிந்திருந்தார்.
சடலம் தெரணியாகல வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் யட்டியாந்தோட்டை பொலிஸாரின் 036-2270666 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.
40 minute ago
45 minute ago
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
45 minute ago
3 hours ago
5 hours ago