R.Maheshwary / 2021 செப்டெம்பர் 21 , பி.ப. 03:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாலித ஆரியவன்ஸ
பதுளை மாவட்டத்தில் 20 தொடக்கம் 29 வயதுக்குட்பட்ட இளைஞர், யுவதிகளுக்காக இன்றும்(21), நாளையும் (22) சினோபார்ம் தடுப்பூசி செலுத்தப்படும் என பதுளை சுகாதார சேவை பணிப்ளர் வைத்தியர் ஹேமந்த டீ சில்வா அறிவித்துள்ளார்.
இதற்கமைய, பதுளை மாவட்டத்தில் 1,40,000 இளைஞர் யுவதிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்படவுள்ள நிலையில், இன்று (21) தடுப்பூசி செலுத்தும் மத்திய நிலையங்களுக்கு, மிகுந்த ஆர்வத்துடன் பெருந்திரளான இளைஞர், யுவதிகள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, பதுளை மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள், கர்ப்பிணிகள் மற்றும் 30 வயதுக்கு மேற்பட்ட 98 சதவீதமானவர்களுக்கு தடுப்பூசி செலுத்தி நிறைவுசெய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
14 minute ago
27 minute ago
38 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
27 minute ago
38 minute ago
2 hours ago