Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை
Sudharshini / 2015 ஓகஸ்ட் 24 , பி.ப. 06:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
பா.திருஞானம்
'கண்டி மாவட்டத்தில் செயற்படும் அனைத்து தொழிற்சங்கங்களுக்கும் நான் ஆதரவளிக்க தயாராகவுள்ளேன். தொழிற்சங்கங்கள் அனைத்தும் இங்கு செயற்படட்டும். ஆனால், தமிழ் மக்களை பிரித்தாளுவதற்கு கண்டியில் நான் ஒருபோதும் இடமளிக்க போவதில்லை' என நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற வேலுகுமார் தெரிவித்தார்.
கண்டி, இரட்டைப்பாதை நீவ்பிகொக் தோட்டத்தில் நேற்று (24) நடைபெற்ற வரவேற்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
'எவ்வித பாகுபாடுமின்றி மக்களுக்கான சேவையை முன்னெடுக்க தயாராகவுள்ளேன். நான், கண்டி மாவட்டத்திலுள்ள ஒரு தொழிற்சங்கத்துக்கோ, ஒரு கட்சிக்கோ பிரதிநிதியாக வரவில்லை. கண்டி மாவட்டத்திலுள்ள அனைத்து தமிழ் மக்களுக்குமான பிரதிநிதியாகவே தெரிவுசெய்யப்பட்டுள்ளேன்;.
தோட்ட பகுதிகளிலுள்ள மக்களின் பிரச்சினைகள் நான் நன்கறிந்தவன்;. புதிதாக தெரிந்துக்கொள்ள வேண்டிய தேவையில்லை. எனவே, அப்பிரச்சினைகளுக்கு தீர்வு காணவேண்டிய தேவை உள்ளது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களை போன்று நான் செயற்பட போவதில்லை. தேர்தலின் பின்னர் அவர்கள், வாக்களித்த மக்கள் தொடர்பில் அக்கரையின்றி இருந்திருக்கலாம். உங்களை ஏமாற்றியிருக்கலாம். நான் புதியவன். அதனால் தான் 40 ஆயிரத்தையும் தாண்டி 60 ஆயிரம் வாக்குகளை பெற்று நாடாளுமன்றம் சென்றுள்ளேன்.
காணிப்பிரச்சினையை கட்டாயம் தீர்த்து வைப்பேன். 25,000 வீடுகளை இந்நிய பிரதமர் வழங்குகின்ற போது அதில் 10 ஆயிரம் வீடுகளை கண்டி மாவட்டத்துக்கு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பேன்.
எம்மத்தியில் இப்போதுள்ள ஒற்றுமை எப்போதும் தொடர வேண்டும். உங்களது ஆதரவு எனக்கு இருக்குமாக இருந்தால் மக்கள் பணியை தொடர முடியும்' என அவர் மேலும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago