Editorial / 2025 டிசெம்பர் 29 , பி.ப. 03:40 - 0 - {{hitsCtrl.values.hits}}

பி.கேதீஸ்
அலுவலகத்திற்கு விசாலமான கட்டிடம் கோரி தலவாக்கலை பிரதேச செயலக அலுவலக ஊழியர்கள் திங்கட்கிழமை (29) அன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தங்கள் அலுவலக கட்டிடத்தில் உள்ள இடவசதி குறைவாக இருப்பதால், இங்கு சேவைகளைப் பெற வருபவர்களும், அங்கு பணிபுரிபவர்களும் நாளாந்தம் கடுமையான அசௌகரியங்களையும், பல்வேறு சிரமங்களையும் எதிர்கொள்வதாக ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
தினமும் ஏராளமான மக்கள் இங்கு சேவைகளைப் பெற வருவதாகவும், இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான மக்கள் சிறிய மேல் தளத்திற்கு வரும்போது, சரியாக சுவாசிக்கக்கூட சிரமப்படுவதாகவும், இதனால் தங்கள் கடமைகளைச் சரியாகச் செய்ய சிரமப்படுவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
முதியவர்கள், கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சேவைகளைப் பெற தங்கள் நிறுவனத்திற்கு வருவதாகவும், அலுவலகத்தில் இருக்கை மற்றும் கழிப்பறை வசதிகள் இல்லாததால் இந்த மக்கள் கடும் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் ஊழியர்கள் கூறுகின்றனர்.
தங்கள் சேவை நேரம் வரும் வரை தங்குவதற்கு கூட இடம் இல்லை என்றும் 34 கிராம சேவைப் பிரிவுகளைச் சேர்ந்த பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் தினமும் இங்கு சேவைகளைப் பெற வருவதாகவும், சேவை நேரம் வரும் வரை தங்குவதற்கு கூட இடம் இல்லை என்றும் போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

1 hours ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago
2 hours ago