Freelancer / 2023 ஏப்ரல் 10 , பி.ப. 05:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
பசறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வெல்கொல்ல பகுதியில் உள்ள வீடொன்றில் துப்பாக்கி (shot gun) ஒன்று மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக பசறை ஆக்கரத்தன்னை பகுதியில் முகாமிட்டுள்ள விஷேட அதிரடிப் படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
அதனையடுத்து, குறித்த வீட்டை ஞாயிற்றுக்கிழமை இரவு 6.30 மணிக்கு சுற்றிவளைத்து தேடுதலை மேற்கொண்ட போது வீட்டினுள் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி கைப்பற்றப்பட்டது. அத்துடன், 35 வயதான நபரும் கைது செய்யப்பட்டார்.
துப்பாக்கியுடன், சந்தேகநபர் பசறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளும் பசறை பொலிஸார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ராமு தனராஜா
1 hours ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
1 hours ago