2026 ஜனவரி 20, செவ்வாய்க்கிழமை

நிர்வாண பாலியல் வீடியோ: நடந்தது என்ன?

Editorial   / 2021 செப்டெம்பர் 03 , பி.ப. 03:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


பலாங்கொடை பஹந்துடாவா எல்ல நீர்வீழ்ச்சியில் நிர்வாணமாக  பாலியல் செயற்பாடுகளை ஈடுபடும் போது, அவற்றை ஒளிப்பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டவர்களை பொலிஸார் தேடி வலைவிரித்திருந்த நிலையில்,  குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் அவ்விருவரும் நேற்று (02)  கைது செய்யப்பட்டிருந்தனர்.

மஹ​ரகமையைச் சேர்ந்த 34 வயதான ஆணும், எல்பிட்டியைச் சேர்ந்த 25 வயதான பெண்ணொருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்த குற்றப்புலனாய்வு பிரிவினர், மேலதிக விசாரணைகளை ​மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், அவ்விருவரும் பொலிஸில் ​ஒப்படைக்கப்பட்டனர். அதன்பின்னர் பொலிஸ் பிணையில் அவ்விருவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட ஆண், கொரோனா வைரஸ் ​தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். அவரு​டன் நெருங்கியிருந்தார் என அப்பெண் அடையாளம் காணப்பட்டார். ஆகையால் அவ்விருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படாமல் பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X