Kogilavani / 2016 ஏப்ரல் 27 , மு.ப. 03:33 - 0 - {{hitsCtrl.values.hits}}

மு.இராமசந்திரன், ரஞ்சித் ராஜபக்ஷ
நாவலப்பிட்டி நகரசைபையின் பழைய பொருட்கள் சேகரிக்கும் களஞ்சியசாலை செவ்வாய்க்கிழமை(26) மாலை தீக்கிரையாகியுள்ளதாக பொலிஸார் கூறினர்.
நாவலப்பிட்டி நகரசபையினரால் பழைய பொருட்களை சேகரித்து வைக்கப்படும் களஞ்சியசாலைக்கருகில் ஐக்கிய தேசியக் கட்சியினரின் கூட்டம் நடைபெற்றது. கூட்டம் ஆரம்பமாவதற்கு முன்பு இங்கு ஐ.தே.கவின் ஆதரவாளர்கள் பட்டாசு கொழுத்தியதால் களஞ்சியசாலைக்குள் பட்டாசுகள் தவறுதலாக விழுந்துள்ளதாகவும் இதனால், இந்நிலையம் தீக்கிரையாகியுள்ளதாகவும் தெரியவருகிறது.
நாவலப்பிட்டிய பிரதேச மக்களும் நகரசபை உறுப்பினர்களும் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் நாவலப்பிட்டி பொலிஸார் கூறினர்.


2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago