Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 12, திங்கட்கிழமை
Freelancer / 2023 ஜூலை 18 , பி.ப. 12:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.சதீஸ் செ.தி.பெருமாள்
படுக்கைக்குச் சென்று உறங்கிக் கொண்டிருந்த 56 வயதான பெண்ணொருவர் ஆற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம், நோர்வூட் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சென்ஜோன் டிலரி கீழ்ப்பிரிவில் இன்று செவ்வாய்க்கிழமை (18) பதிவாகியுள்ளது.
காசல்ரீ நீர்த் தேக்கத்துக்கு நீரேந்திச் செல்லும் கெசல்கமுவ ஓயாவில் இருந்தே குறித்த பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த ஆறுமுகம் தனலெட்சுமி என்ற பெண், திடீரென காணாமல் போயுள்ளார். அக்கம் பக்கத்தினருடன் இணைந்து உறவினர்கள் தேடிய போதே, அவரது சடலம் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
ஸ்தலத்துக்கு விரைந்துள்ள தடயவியல் பொலிஸாரும் நோர்வூட் பொலிஸாரும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
4 hours ago