2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

பரீட்சைகள் பிற்போடப்பட்டுள்ளன

Freelancer   / 2022 செப்டெம்பர் 30 , பி.ப. 01:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

பி.கேதீஸ்

எதிர்வரும் 5ஆம் திகதி நடைபெறவிருந்த மத்திய மாகாண  பரீட்சைகள் பிற்போடப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கல்வியில் ஒன்றிய தலைவர் கணபதி  கனகராஜ்  தெரிவித்துள்ளார்.

மத்திய மாகாண கல்வித் திணைக்களத்தினால் கல்விப் பொதுத் தராதர உயர்தர மாணவர்களுக்கான பரீட்சைகள் தற்போது நடைபெற்று வருகின்றன. 

எதிர்வரும் 5ஆம் திகதி பரீட்சைக்கான நேர சூசி வழங்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக பல பாடசாலையின் அதிபர்கள் எம்மோடு தொடர்பு கொண்டு சரஸ்வதி பூஜை தினத்தில் நடைபெறவிருக்கின்ற மத்தியமாகாண பரீட்சைகளை  ஒத்தி வைக்குமாறு கேட்டுக் கொண்டனர். 

இது தொடர்பில் மத்திய மாகாண கல்வித் திணைக்களத்தோடு தொடர்பு கொண்டு  குறிப்பிட்ட திகதிக்கான பரீட்சைகளை  ஒத்திவைக்குமாறு காங்கிரஸ் கல்வியில் ஒன்றியம் கேட்டுக்கொண்டது.

எமது கோரிக்கையை ஏற்று எதிர்வரும் 5ஆம் திகதி நடைபெறவிருக்கின்ற பரீட்சையை ஒத்திவைத்து பிரிதொரு தினத்தில் வைப்பதற்கு மத்திய மாகாண பரீட்சைத் திணைக்களம்  தீர்மானித்திருக்கின்றது என்றார். (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X