Editorial / 2018 ஏப்ரல் 18 , பி.ப. 05:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மு.இராமச்சந்திரன்
நோட்டன் பிரிட்ஜ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, மஸ்கெலியா நோட்டன் பிரதான வீதியில், சிவனொளிபாதமலைக்கு யாத்திரிகள் சென்ற பஸ்ஸின் சில்லில் சிக்குண்ட ஒருவர், படுகாயமடைந்து கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, நோட்டன் பிரிட்ஜ் பொலிஸார் தெரிவித்தனர். நோட்டன் பிரிட்ஜ் டெப்லோ பகுதியிலே, நேற்று (17) இரவு 7 மணியளவில், இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
காலியிலிருந்து சிவனொளிபதமலை சென்ற யாத்திரிகள் பஸ்ஸில், டெப்லோ பகுதியைச் சேர்ந்த, குறித்த நபர் ஏற முற்பட்ட போது, தவறி வீழ்ந்து, பஸ்ஸின் சில்லில் சிக்குண்டு படுகாயமடைந்துள்ளதாகவும், அவர் மது போதையிலிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி பஸ்ஸின் சாரதியை, நோட்டன் பிரிட்ஜ் பொலிஸார் கைது செய்துள்ளதுடன், விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
48 minute ago
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
2 hours ago
2 hours ago
3 hours ago