2025 மே 20, செவ்வாய்க்கிழமை

பாதிமரம் விழுந்ததில் போக்குவரத்து பாதிப்பு

Editorial   / 2022 ஜூலை 09 , பி.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

 

நுவரெலியா-பதுளை பிரதான வீதியில் நானுஓயா பகுதிக்கு செல்லும் சந்தியில் பாரிய ஸைபிஸ் மரமொன்று பாதியாக உடைந்து வீழ்ந்துள்ளது.

இதன் காரணமாக நுவரெலியா நகரில் இருந்து பதுளை,நானுஓயா போன்ற பகுதிக்கு செல்லும் வீதிகளின் ஊடான போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது.

அதேநேரத்தில் மரத்தை அகற்றும் பணிகளில், பாதுகாப்பு படையினர்,மின்சார சபையினர், ,வன இலாகா பிரிவினர் ,பொலிஸார் மற்றும் பொதுமக்கள் இணைந்து ஈடுப்பட்டு வருகின்றனர்.


 

அதேசமயம் பாரிய மரத்தின் ஒரு பாதி முறிந்து  மின்சார வயர் மீதும்  விழுந்ததில் அப்பகுதியில் மின்சார தடையும் ஏற்பட்டுள்ளது.

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X