2026 மே 06, புதன்கிழமை

பாதுகாப்பு வழங்குமாறு கோரிக்கை

Editorial   / 2020 மார்ச் 25 , பி.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நீலமேகம் பிரசாந்த்

கொத்மலை பிரதேச சபைக்குட்பட்ட மடக்கும்புற மத்திய பிரிவு தோட்ட மக்கள், வேலைக்குச் செல்லும்போது, முகக்கவசங்களை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

தோட்டத்துக்குச் செல்லும் தங்களுக்கு எந்தவொரு பாதுகாப்பும் இல்லை என்றும் எனினும், தாங்கள் தொழிலுக்குச் செல்லாவிட்டால், தொழிற்சாலை இயங்காது என்றும் தொழிற்சாலை இயங்காவிட்டால், தங்களது சம்பளம் குறைந்து, பொருளாதாரம் பாதிக்கப்படும் என்றும் தோட்டத் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே, தாங்கள் பாதுகாப்பான முறையில் தொழில் செய்வதற்கு, மலையக அரசியல்வாதிகளும் தோட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என, மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .