2026 மே 03, ஞாயிற்றுக்கிழமை

பாவனைக்கு உதவாத 29 கிலோகிராம் கோழி இறைச்சியுடன் ஒருவர் கைது

Editorial   / 2020 ஏப்ரல் 15 , பி.ப. 01:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

மனித பாவனைக்கு உதவாத 29 கிலோகிராம் கோழி இறைச்சியுடன் இருவரை, கலகெதரவில் வைத்து, பொது சுகாதார உத்தியோகத்தர்கள், நேற்று (14) கைதுசெய்துள்ளனர்.

ஓட்டோ ஒன்றிலேயே, கோழி இறைச்சிக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் குறித்த ஓட்டோவில், கோழி இறைச்சி பழுதடையாது பாதுகாப்பதற்குத் தேவையான வெப்பநிலையைப் பேணக்கூடிய வசதிகள் இருக்கவில்லை என்று, சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.  

மேற்படி இருவரும் கலகெதர நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது, அவர்களை தலா ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீரப் பிணையில் செல்லுமாறு நீதவான் உத்தரவிட்டதுடன், வழக்கை  ஜூன் மாதம்  12ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளார்.  
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .