R.Maheshwary / 2021 டிசெம்பர் 02 , மு.ப. 10:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஸ
தேயிலைத் தோட்டமொன்றிலிருந்து உயிரிழந்த நிலையில் சிறுத்தையொன்றின் சடலமொன்று நேற்று (1) மாலை மீட்கப்பட்டுள்ளதென நல்லத்தண்ணி வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரி பிபாஸ் கருணாதிலக தெரிவித்தார்.
நோர்வூட்- பிலிங்போனி தோட்டத்திலிருந்தே குறித்த சிறுத்தையின் சடலம் மீட்கப்பட்டதாகவும் தொழிலுக்குச் சென்ற தொழிலாளர்கள் வழங்கிய தகவலுக்கமையவே, இச்சிறுத்தையின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
உயிரிழந்த சிறுத்தை 6 வயதான ஆண் சிறுத்தை என்றும் குறித்த தோட்டத்தில் உலவும் மற்றுமொரு சிறுத்தையுடன் ஏற்பட்ட மோதலிலேயே இந்த சிறுத்தை உயிரிழந்திருக்கலாம் என, வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிறுத்தையின் சடலம் நல்லதண்ணி வனஜீவராசிகள் திணைகளத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
26 minute ago
46 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
46 minute ago
1 hours ago
1 hours ago