மொஹொமட் ஆஸிக் / 2019 நவம்பர் 21 , பி.ப. 07:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
கண்டி - மாத்தளை புகையிரதத்தில் மோதுண்டு, 17 வயது இளைஞனொருவன் உயிரிழந்துள்ளார் என, கட்டுகஸ்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று (20) மாலை, மஹியாவை, நித்தவல சந்திக்கு மேல் பகுதியிலேயே, இந்த சம்பவம் இடம்பெற்றது.
குறித்த இளைஞனை அடையாளம் காண்பதற்கு, எந்தவொரு தடயமும் கிடைக்கவில்லை என்றும் கறுப்பு நிற பணப்பை ஒன்று மாத்திரமே, பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்றது என்றும் தெரியவருகின்றது.
எனவே, 17 வயது சிறுவன் காணாமல் போன சம்பவங்கள் பதிவாகியிருப்பின், கட்டுகஸ்தோட்டை பொலிஸ் நிலையத்துக்கு அறிவிக்குமாறு, பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
3 hours ago
7 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago
7 hours ago
8 hours ago