Freelancer / 2024 ஜூலை 13 , பி.ப. 09:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
மஸ்கெலியா நகரில் இருந்து அவிஸ்சாவலை நோக்கி செல்லும் அவிஸ்சாவலை அரச பேருந்தில் இன்று மேலதிக வகுப்புக்குச் சென்ற மாணவன் பேருந்தில் இருந்து தடுக்கி விழுந்து படுகாயமடைந்ததாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
மவுஸ்சாக்கலை தோட்டத்தில் வசிக்கும் கே.டி.தினித் என்ற 10 வயதுச் சிறுவனே மேலதிக வகுப்புக்குச் சென்று வீடு திரும்பும் போது மவுஸ்சாகலை சந்தியில் இறங்குகையில் தடுக்கி விழுந்து உள்ளார்.
இந்த மாணவன் கையில் காயமடைந்த நிலையில் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார் என மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். R
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago