2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

பேருந்தில் பயணித்தவர் ஐஸூடன் கைது

Janu   / 2025 பெப்ரவரி 10 , பி.ப. 04:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பிலிருந்து பொகவந்தலாவ நோக்கிச் சென்ற தனியார் பேருந்தில் பயணித்த பயணி ஒருவர் ஞாயிற்றுக்கிழமை (09) அன்று இரண்டு மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பிலிருந்து பொகவந்தலாவை நோக்கிச் சென்ற தனியார் பேருந்தில் ஒருவர் ஐஸ் போதைப்பொருளை வைத்திருப்பதாக  கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், பொகவந்தலாவ பொலிஸ் அதிகாரிகள், குறித்த பேருந்து பொகவந்தலாவ நகருக்கு வந்ததன் பின் சோதனையிட்ட போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொகவந்தலாவ பகுதியில் உள்ள தோட்டம் ஒன்றில் வசிக்கும் 38 வயதுடைய சந்தேக நபர் போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர் என பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுபவர் என தகவல் கிடைத்துள்ளதாகவும் பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ள​மை குறிப்பிடத்தக்கது.

 எஸ்.கணேசன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X