2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

பொகவந்தலாவையில் குப்பைகள் குவிகின்றன

எஸ்.சதிஸ்   / 2020 ஓகஸ்ட் 23 , பி.ப. 05:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

நோர்வூட் பிரதேச சபையால், பொகவந்தலாவ நகரில், நாளாந்தம் சேகரிக்கப்படும் குப்பைகள், பொகவந்தலாவ நகரப் பகுதிகளில் கொட்டப்பட்டுவதாக, பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இந்தக் குப்பைகள், மீன் விற்பனை செய்யும் பகுதிக்கு அருகாமையிலே கொட்டப்பட்டு வருவதாகவும் இதனால், துர்நாற்றம் வீசுவதாகவும் மக்கள் தெரிவித்தனர். இவ்வாறு சேகரிக்கப்படும் குப்பைகளை, பாரதிபுரம் பகுதியில் கொட்டுவதற்கே அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றும் எனினும் அங்கு குப்பைகள் கொட்டப்படுவதில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

எனவே, இது தொடர்பில் நோர்வூட் பிரதேச சபை கவனம் செலுத்தவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .