2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

போதைப் பொருட்களுடன் இருவர் கைது

Kogilavani   / 2021 ஜனவரி 15 , மு.ப. 11:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ் 

ஐஸ்,ஹெரோய்ன் போதைப் பொருளை தன்வசம் வைத்திருந்த இருவரை, நல்லதண்ணி பொலிஸார், நேற்று (14) இரவு கைதுசெய்துள்ளனர்.

சிவனொளிபாத மலைக்கு யாத்திரை மேற்கொண்ட கல்கிஸை, தெஹிவளை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 27,28 வயதுடைய இருவரையே பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

சிவனொளிபாத மலையின் அடிவாரத்தில் வைத்து சோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது, அவர்களிடமிருந்து போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேற்படி இருவரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X