2026 மே 09, சனிக்கிழமை

போலி டிக்கெட்டுகள் மூலம் பணத்தை வசூலித்த இருவர் கைது

Editorial   / 2019 செப்டெம்பர் 15 , பி.ப. 05:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஏ.ஏ.எம்.பாயிஸ்

சிறுமியொருவர் நோய் வாய்ப்பட்டுள்ளார் என்று, பொய் கூறி, போலி டிக்கெட்டுகளை விற்று பொதுமக்களி டம் பணம் வசூலித்தனர் என்றக் குற்றச்சாட்டில், இரு இளைஞர்களை, பலாங்கொடை பொலிஸார், இன்று கைது செய்துள்ளனர்.

சிறுமியின் பெயரை பெயரிட்டும்  டிக் கட்டுகளை பல பெறுமதிகளில் அச்சிட்டும் வங்கிக்கணக்கொன்றின் இலக்கத்தைக் குறிப்பிட்டும் அக்கணக்கில் விரும்பியோர் பணத்தை வைப்புச்செய்யுமாறு  டிக்கெட்டுகள் மூலம் கேட்கப்பட்டுள்ளன.

மேற்படி இருவர் குறித்தும் பலாங்கொடை பொலிஸில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய அவ்விருவரையும் கைதுசெய்துள்ள பொலிஸார், அவர்களிடமிருந்து போலி டிக்கெட்டுகள் அனைத்தையும் பறிமுதல் செய்துள்ளனர்.

இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .