Freelancer / 2023 மே 14 , பி.ப. 02:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன்
ஹட்டன், ரொத்தஸ் கொலனியில் வாழும் மக்களுக்கு குடிநீரை பெற்றுக்கொடுப்பதற்கான ஆரம்பக்கட்ட செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமானின் ஆலோசனைக்கமையவும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ராமேஷ்வரனின் வழிகாட்டலின் கீழ் குறித்த பகுதிக்கு குழுவொன்று அண்மையில் நேரில் பயணம் மேற்கொண்டது.
குடிநீர் திட்டத்தை முன்னெடுப்பதற்கான உரிய இடம் அடையாளம் காணப்பட்டது, இடத்துக்குரிய ஒதுக்கீட்டு அனுமதி கிடைக்கப்பெற்ற பின்னர் அடுத்தக்கட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படும். தோட்ட மக்களுடனும் அமைச்சின் பிரதிநிதிகள் கலந்துரையாடி, கருத்துகளை கேட்டறிந்துகொண்டனர்.
ரொத்தஸ் கொலனியில் வாழும் சுமார் 600 குடும்பங்கள், தமக்கு சுத்தமான குடிநீரை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.




44 minute ago
50 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
50 minute ago
1 hours ago
2 hours ago